புதன், 7 மார்ச், 2018

ஒரு தபால்காரன் தோன்றுவான்

சொற்களை மட்டும்
கூட்டிக் கொண்டே
போகிறவர்கள்
சொன்னவனை
கழித்துவிட்ட பிறகு
அதன் அர்த்தங்கள்
அனாதையாவதில்
விந்தையில்லை

உடலைக் கழற்றி
வைத்துவிட்டு
கேள்விக்கு
விடை சொன்னவன்
நேற்றோடு செத்துவிட்டான்

சொற்கள் வைத்த
கொள்ளியில்
சொர்க்க ரதம் ஏறிவிட்டான்

இனி அவன்
உங்கள் முன்
ஒரு தபால்காரனாய்த்
தோன்றுவான்

கடிதங்கள் சிரித்தாலென்ன
அழுதால் என்ன?