செவ்வாய், 28 நவம்பர், 2017

மரணமும் மனித வாழ்க்கையும்

விடை சொல்லியாகிவிட்டது
இனி கொஞ்ச காலத்திற்கு
விளக்கம் தேடி                                      அலைய வேண்டியதுதான்......

ஞாயிறு, 26 நவம்பர், 2017

கருத்துச் சுதந்திரம்

அவன் சுரண்டுகிறான்
இவன் சுரண்டுகிறான்
என்று பேசும் நிலைபோய்
என்றைக்கு
நீ சுரண்டுகிறாய்
என்று பேசும்
தைரியத்தைத் தரும் சார்பற்ற நிலை
உருவாகிறதோ அதுதான்
உண்மையான
கருத்துச்சுதந்திரம்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

புதன், 22 நவம்பர், 2017

?

இந்த குளத்தில்
எந்த மீன்
குளிக்காதது ?

கவிதை

வயிற்றுக்கு இரைதேடும் வினாக்குறிகள்
வயல்வெளியில் விடைதேடும்
கொக்குகள் 

செவ்வாய், 21 நவம்பர், 2017

ஞாயிறு, 19 நவம்பர், 2017

வெள்ளி, 17 நவம்பர், 2017

அறமும் - கடவுளும்

நடுச்சாலையில்
நசுங்கிச் சாகின்றன
காலம் மாறிவிட்டது
தெரியாமல்
இன்னும்
பழைய வேகத்திலேயே
சாலையைக் கடக்கும்
நத்தைகள்...

பழைய ஞாபகத்தில்
நியாயம் கேட்கப்போன
மனுநீதிச் சோழனின்
கன்னத்தில்
யாரோ அறைந்த
சப்தம்

ஆற்றாமையில்
அழுதுகொண்டே
அறங்களை வாரியெடுத்த
மனுச் சோழன்
மாரடைப்பால்
மரணித்தான்

மீண்டும்
உயிர்ப்பிக்க
நினைத்த கடவுள்
பூமிக்கு வந்தால்
சுவாசக் கோளாறு
ஏற்பட்டுவிடுமோ
என்ற பயத்தில்
பதுங்கிக் கொண்டார்.

வியாழன், 16 நவம்பர், 2017

கவிதை

முரண்

எவ்வளவு
திருத்தியும்
திருந்தாத ஆசிரியர்
இன்னும்
பேப்பரை மட்டுமே
திருத்திக்கொண்டிருக்கிறார்.

சனி, 11 நவம்பர், 2017

வியாழன், 9 நவம்பர், 2017