நடுச்சாலையில்
நசுங்கிச் சாகின்றன
காலம் மாறிவிட்டது
தெரியாமல்
இன்னும்
பழைய வேகத்திலேயே
சாலையைக் கடக்கும்
நத்தைகள்...
பழைய ஞாபகத்தில்
நியாயம் கேட்கப்போன
மனுநீதிச் சோழனின்
கன்னத்தில்
யாரோ அறைந்த
சப்தம்
ஆற்றாமையில்
அழுதுகொண்டே
அறங்களை வாரியெடுத்த
மனுச் சோழன்
மாரடைப்பால்
மரணித்தான்
மீண்டும்
உயிர்ப்பிக்க
நினைத்த கடவுள்
பூமிக்கு வந்தால்
சுவாசக் கோளாறு
ஏற்பட்டுவிடுமோ
என்ற பயத்தில்
பதுங்கிக் கொண்டார்.