திங்கள், 7 மே, 2018

வேர்களைப் பிடுங்காமல் ?

விரல்கள்
காயப்படுத்தும்போதெல்லாம்
அதன் நகங்கள் மட்டுமே
நறுக்கிவிடப்படுகின்றன

அதன் வேர்களைப் பிடுங்காமல்
வெட்டப்படும் நகங்களால்
ஆசிபாக்களின் அலரல்
ஓயப்போவதில்லை

சிதைக்கப்பட்டவளின் வலி
தெரியாமல்
நகம் வெட்டிக்கொண்டிருந்த
கடவுளை
என்செய்வீர்கள்?

அதன் கரசேவகர்களை
என்செய்வீர்கள்?

கருத்துகள் இல்லை: