விரல்கள்
காயப்படுத்தும்போதெல்லாம்
அதன் நகங்கள் மட்டுமே
நறுக்கிவிடப்படுகின்றன
அதன் வேர்களைப் பிடுங்காமல்
வெட்டப்படும் நகங்களால்
ஆசிபாக்களின் அலரல்
ஓயப்போவதில்லை
சிதைக்கப்பட்டவளின் வலி
தெரியாமல்
நகம் வெட்டிக்கொண்டிருந்த
கடவுளை
என்செய்வீர்கள்?
அதன் கரசேவகர்களை
என்செய்வீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக