நேற்று இரவு
சொற்களைத் தந்துவிட்டு
நீ உறங்கிவிட்டாய்
என்
எண்ணச் சுயம்வரத்தில்
ஆசை மீதூர
உன்னைக்
கண்டுபிடிக்க முடியாத
குழப்பத்தில்
மதிமயங்கி
எல்லோர் கழுத்திலும்
மாலையிட்டேன்
சுய நினைவு வந்து
சுற்றிப் பார்க்கையில்
அவை எங்கும்
சுய உருக்காட்டி
சிரித்து நிற்கும்
போலி நளன்கள்
ஆசை வளர்த்த
அன்னத்தின் கழுத்தறுத்து
தூதுவிட்டேன்
காற்றெங்கும்
ரத்த வாடை
திணை: கைக்கிளை
- ச. நீலமேகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக