சனி, 15 பிப்ரவரி, 2025
ஏனிந்த யாசகம்
யாரென்றே தெரியாமல்
ஏனிந்த யாசகம்
கேட்டதெல்லாம்
கிடைத்துவிடப்போகிறா?
ஒரு வேளை
தருவதெல்லாம்
எண்ணப்படி
நேர்ந்திடுமா?..
ஒரு முறை
காதலைச் சொல்லும்
தற்கொலைக்கு
முயற்சி செய்வோம்
உயிர் பிழைத்தால்
உன்னை நானும்
என்னை நீயும்
தின்று பசியாறலாம்.
- ச. நீலமேகன்.
திங்கள், 10 பிப்ரவரி, 2025
?
என்
மனவெளியில்
வேர்விட்ட
கொடியொன்று
ஒரு ஆதிக்கக்காரனின்
சாட்டைக்கோலில்
படர்ந்து குழைகையில்
பூத்துச் சிரிக்கையில்
இதயம் வேகிறது
பூ வாடுவதையோ !
கொடி
வேரற்றுப் போவதையோ !
சுயநலமென்றா
சொல்வீர்கள்?
- ச. நீலமேகன்
10-02-2025
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)