திங்கள், 10 பிப்ரவரி, 2025

?

என்
மனவெளியில்
வேர்விட்ட
கொடியொன்று
ஒரு ஆதிக்கக்காரனின்
சாட்டைக்கோலில்
படர்ந்து குழைகையில்
பூத்துச் சிரிக்கையில்
இதயம் வேகிறது

பூ வாடுவதையோ !
கொடி 
வேரற்றுப் போவதையோ !
சுயநலமென்றா
சொல்வீர்கள்?

- ச. நீலமேகன்
10-02-2025


கருத்துகள் இல்லை: