அன்புள்ள
தம்பிக்கு ...
இங்கு
இரவு வேளைகளில்
சமீப காலமாக
சமைப்பதை
விட்டுவிட்ட
காரணத்தால்
இப்போதெல்லாம்
அம்மா அடிக்கடி
வருவதில்லை
என்ன செய்வது?
வீதிக்கடையிலாவது
சாப்பிட்டு உறங்கு
அப்போதுதான்
அங்காவது
அம்மா வருவாள்
கனவில் ...
அவளுக்கும்
நம்மைவிட்டால்
வேறு யார் இருக்கிறார்கள்.
- ச. நீலமேகன்.
15-03-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக