குறைகளைச்
சொல்லி
முறையிட்டேன்
பூசாரியின்
ஒத்துழைப்புக்காக
காத்துக்கிடக்கிறது
கடவுள்.
தட்சணை
தந்துவிட்டால்
கடவுளுக்காக
காத்திருக்காமல்
காரியம்
முடிப்பான்
பூசாரி
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி
ஆண்டவனா?
பூசாரியா?
என்னிலிருந்து
புறப்பட்ட
கேள்விக்கணை
என்னையே கொல்லும்
மெல்ல மெல்ல...
_ ச.நீலமேகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக