திங்கள், 29 ஜூன், 2020

எதுவும் கேட்பதாயில்லை

எவ்வளவோ
சொல்லிவிட்டேன்
யாரும் கேட்பதாயில்லை

இல்லை இல்லை
எதுவும் கேட்பதாயில்லை

வண்டி ஏர்க்காலை
தூக்கியதும்
படுத்து
அசைபோட்ட மாடு
அதுவாகவே
வந்து நிற்கும்
நுகத்தடியில்...

- ச. நீலமேகன்.
  29-06-2020

கருத்துகள் இல்லை: