ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

அர்த்தம்

நீ
நடுக்கடலின்
நிசப்தம்
நானோ
கரைமோதும்
அலையின்
இரைச்சல்

நீ
ஆழ்கடலுக்குள் சென்று
அமைதியைப்
பிடித்து வருகிறாய்

நானோ
கரையோரம்
நின்று
இரைச்சலைப் பிடித்து
விற்கிறேன்

அர்த்தப்புயல்
வரும்போது
குறட்கடல்
கொந்தளிக்கிறது

நீ
கரை திரும்ப
காலதாமதம்
ஆனபோது

மீனிலிருந்து
விழுகிறது
இரண்டு சொட்டு
கடல்.

- ச. நீலமேகன்