சென்றமுறை
ஜனநாயகக் கிருமிகளால்
தாக்கப்பட்ட தருமி
இந்த முறை
பழைய சோற்றுக்குப்
பாடிக்கொடுத்த
கூந்தல் நாற்றம் பற்றிய
குறும்பாவை
இறையனார் காட்ட
அந்தப்புர ஞாபத்தில்
அரசன் அகமகிழ்ந்து
அவைநடுவே
அள்ளித் தருகிறான்
ஆயிரம் பொற்காசுகளை...
சொற்குற்றம்
பொருட்குற்றம்
என
எக்குற்றமும்
காணது
கவிதை எழுதியது
நீதானா?
எனக் கேட்க மறந்து
வியந்து நிற்கிறார்
நெற்றிக்கண்ணுக்கு
பயந்து நிற்கிறார்
நடுவுநிலை தவறாத
நக்கீரர்...
வறுமைக்கு
இரையான பாட்டுக்கள்
இறையனார் பாட்டாவது
இப்படித்தான்.
ச.நீலமேகன்
20.10.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக