செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஏழாம் நாள் நிகழ்வில் "பெரியாரும் பெண் கல்வியும்" என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றச் சென்றிருந்தேன். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சேர்ந்து சுமார் 200 மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு குறித்தும் அதிலும் குறிப்பாக பெண்விடுதலைக்கு எத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்பதைப் பற்றியும் உரையாற்றினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக