சனி, 15 பிப்ரவரி, 2025

ஏனிந்த யாசகம்

யாரென்றே தெரியாமல்
ஏனிந்த யாசகம்
கேட்டதெல்லாம்
கிடைத்துவிடப்போகிறா?
ஒரு வேளை
தருவதெல்லாம்
எண்ணப்படி
நேர்ந்திடுமா?..

ஒரு முறை 
காதலைச் சொல்லும்
தற்கொலைக்கு 
முயற்சி செய்வோம்
உயிர் பிழைத்தால்

உன்னை நானும்
என்னை நீயும்
தின்று பசியாறலாம்.

- ச. நீலமேகன்.

கருத்துகள் இல்லை: