வெள்ளி, 25 ஏப்ரல், 2008

செய்தி

சென்னைப் பல்கலைக் கழக எப் 50 அரங்கில் தமிழ் மொழித்துறை சார்பில் தொல்.திருமாவளவன் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தகவல் ச.நீலமேகன்

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

கருத்து

மக்கள், பணத்தை சேமிப்பதைப் போல இரத்தத்தையும் இரத்தவங்கியில் சேமிக்கும் திட்டத்தை ஏற்படுத்தினால் என்ன ?

கவிதை

சட்டமென்ன செய்யும்
முருகர் பயணிக்கிறார்
மயில் மீது

கவிதை

உனக்குள்ளும்
ஒரு மனம்
இருக்கிறது
விழியில்லாதவன்
வீட்டுக் கண்ணாடியைப் போல

கவிதை

தோழர்களே!
அந்தக் குழாயை மூடுங்கள்
ஏழையின் உணவு
வீணாகிக் கொண்டிருக்கிறது

திங்கள், 21 ஏப்ரல், 2008

வியாழன், 3 ஏப்ரல், 2008

பாரதி பாட்டு

சோற்றினுக் கறிவை விற்றுத்
தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று
தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்
குப்பையிற் கவிகள் சோராக்
குறிவிடா திறந்து போகும்
கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்
விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானமும் பொங்கச்
சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்
நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்யபாரதி
நாமம் வாழ்க!
-நாமக்கல் கவிஞர்

கவிதை

மனிதா
உன் கண் என்னும்
குற்றாலத்தில்
கண்ணீர்என்னும்
அருவி கொட்டியதேனோ!
ஏன் ?
வறுமை என்னும்
சீசன்
தொடங்கிவிட்டதா?

நாடகங்களும் -ஆசிரியர்களும்

  • அன்னீத நாடகம் -மாரிமுத்தாப் பிள்ளை
  • திரி சூலம் -வாசவன்
  • மூன்றாம் பிறை -புவியரசு
  • உயிரின் விலை -பழனி.சோ.முத்துமாணிக்கம்
  • நாற்காளிக்காரர் -ந.முத்துச்சாமி
  • நந்தன் கதை -இந்திரா பார்த்தசாரதி
  • வெறியாட்டம் -சே.இராமானுசம்
  • குதிரைக்காரன் கதை -எம்.டி.முத்துக்குமாரசாமி
  • குரல்கள்,தடி,மீட்சி -இன்குலாப்
  • முதல் முழக்கம் -இரா.கோதண்டபாணி

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

சனி, 29 மார்ச், 2008

கவிதை

எதிரிகள்
துப்பாக்கியோடு
நிற்கிறார்கள்
நீங்களோ
கோல்கொடுத்து
அனுப்புகிறீர்கள்
சொல்லுங்கள்
தமிழ்
வெல்லுமா !

கவிதை

மலடி என்றாள்
மாமியார்
அவளை
அம்மா
என்றழைத்தது
அவள் வீட்டுப்
பசு

கவிதை

சட்டம்
அடித்தால்
குற்றம் என்கிறது
அழுதால்
கோழை என்கிறது
ஊமையாய்
நீதி

கவிதை

பொதுவுடமை வாழ்வது
அரசு விடுதிகளில்
மட்டும்தான்
உள்ளாடை தவிர்த்து
உள்ளதனைத்தும்
பொது