தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால், 1970 மார்ச் மாதம் சிறந்த திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் பரிசு வழங்கும் விழா ஒன்றில் ‘இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறைவணக்கம் என்பது தமிழ்தாய் வாழ்த்துப்பாடலாக இருக்கும், மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்தனர். கி.வா. ஜகன்நாதன் ‘அங்கிங் கெனாதபடி’ என்று தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாம் எனக் கருத்து தெரிவித்தார். ஆனால், கா. அப்பாதுரையார், மா.பொ.சி., மு.வ., போன்றோர் பொருத்தமானது என்றே ஆதரித்தனர்.
இப்பாடலுக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்தனர். கி.வா. ஜகன்நாதன் ‘அங்கிங் கெனாதபடி’ என்று தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாம் எனக் கருத்து தெரிவித்தார். ஆனால், கா. அப்பாதுரையார், மா.பொ.சி., மு.வ., போன்றோர் பொருத்தமானது என்றே ஆதரித்தனர்.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!
- மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக