ஆரிப்போன
அந்திம வாழ்க்கைக்கு
சூடான சுண்டல்விற்று
உயிர்ச்சுடர் ஏற்றுகிறாள்
யாருமற்ற கிழவி ….
“சாகிற காலத்தில
இதெல்லாம் வாழ்ந்து
என்ன செய்யப்போகிறது…"
எனும் சாகாதவர்களின்
சொல் கேட்டு
ஒவ்வொரு நாளும்
சுடர் அணைக்கக்
காத்திருந்த காலத்தின்
குழவி நாணும்
பின்பு
நொடிநொடியாய்ச்
சாகும்.
- நீலமேகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக