நம்பி அகப்பொருள்
ü நம்பி அகப்பொருள், அகப்பொருள்
இலக்கணத்துக்கென்று உருவான தனிப்பெரும் நூலாக விளங்கிவருகிறது.
ü இது தமிழ் இலக்கண நூலாகிய
தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த ஒரு சார்பு நூலாகும்.
ü இந்நூல் கி.பி. 13ஆம்
நூற்றாண்டில் தோன்றியது.
ü இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி
ஆவார்.
ü ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி
- வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர் என்பது கருதி
‘நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டவர்.
ü நம்பி, என்பது இவரது
இயற்பெயர், சமண சமயத்தவர்.
ü இவர் தம் அகப்பொருள்
நூலுக்கு “அகப்பொருள் விளக்கம்” என்றே பெயரிட்டார். இவரே இந்நூலுக்கு உரையும் எழுதியுள்ளார்.
ü பொய்யாமொழிப் புலவர்
இயற்றிய “தஞ்சைவாணன் கோவை” என்ற நூல் நம்பியகப்பொருளுக்கு உதாரண நூலாக விளங்குகிறது.
ü இந்நூல் அகத்திணையியல், களவியல்,
வரைவியல், கற்பியல், ஒழிபியல்
என்னும் 5 இயல்களாகப் பகுக்கப்பட்டு, 252 நூற்பாக்களில்
விவரிக்கப்பட்டுள்ளது.
ü பல்வேறு கால கட்டங்களிலும்
தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களுள் நம்பியகப்பொருள் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக