நற்றிணை
குறிஞ்சி
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள்
பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது
ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த
தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா
உலகம் போலத்
தம் இன்று அமையா
நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல்
அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
துறை : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி
சொல்லியது.
பாடியவர் : கபிலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக