ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர் - நற்றிணை

நற்றிணை

குறிஞ்சி


நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே'

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை;

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

 

துறை              : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

பாடியவர்      : கபிலர்

கருத்துகள் இல்லை: