புறநானூறு
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
திணை : பொதுவியல்
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக