ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி - புறநானூறு

புறநானூறு

 

 

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.  

 

திணை            : பொதுவியல்

துறை              : பொருண்மொழிக் காஞ்சி.

பாடியவர்       : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

கருத்துகள் இல்லை: