கலித்தொகை
குறிஞ்சிக்கலி
‘சுடர்த்தொடீஇ! கேளாய்!
தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலில்
சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும்
சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும்
இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன்
எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொன் சிரகத்தால்
வாக்கிச், சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா
என்றாள், எனயானும்
தன்னை அறியாது
சென்றேன்,மற் றென்னை,
வளைமுன்கை பற்றி
நலியத் தெருமந்திட்டு,
அன்னாய் இவனொருவன்
செய்ததுகாண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
உண்ணுநீர்
விக்கினான் என்றேனா, அன்னையும்,
தன்னைப்
புறம்பழித்து நீவ,மற் றென்னைக்
கடைக்கண்ணால்
கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான்; அக் கள்வன் மகன்.'
பாடிய புலவர் : கபிலர்
துறை :புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின்
பகுதிக்கண்” தலைவி தோழிக்குக் கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக