ஐங்குறுநூறு
மருதம்
வேட்கைப் பத்து
'வாழி ஆதன், வாழி
அவினி!
நெல் பல பொலிக!
பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே.
பாடிய புலவர் : ஓரம்போகியார்.
துறை : புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக