புதன், 6 செப்டம்பர், 2023

நன்னூல்

நன்னூல்

 

 

v எழுத்திலக்கணம் பற்றியும் சொல்லிலக்கணம் பற்றியும் கூறும் இந்நூல் எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம் என இரண்டாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளது.

 

v பாயிரம் (55 நூற்பாக்கள்), எழுத்ததிகாரம் (202 நூற்பாக்கள்), சொல்லதிகாரம் (205 நூற்பாக்கள்) என மூன்று பகுதிகளை கொண்டுள்ள நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

v எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல்,மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் 202 சூத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

 

v சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல்

என ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் 205 சூத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

 

v சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது.

 

v இயற்றியவர் பவணந்திமுனிவர்.  சமண சமயத்தவர்.

 

v காலம் கி.பி. 13 ம் நூற்றாண்டு.

 

v மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: